வணக்கம் நண்பர்களே!
இன்று நவராத்ரியின் ஆறாம் நாள். தினமும் ஒரு பாரதியின் பாடலை, பாம்பே ஜெயஸ்ரீ பாட கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதுவரை கேட்காதவர்கள், பழைய பதிவுகளைப் படிக்கவும்/பாட்டைக் கேட்கவும்.
சில தினங்கள் முன்பு, பாரதியின் தாலாட்டுப்பாடலான, சின்னஞ் சிறு கிளியே பாட்டு கேட்டோம். இன்று அதற்கு நேர்மறையாக ஒரு திருப்பள்ளியெழுச்சி. பொதுவாக, திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் திருப்பள்ளியெழுச்சி கேள்விப்பட்டிருக்கிறோம். திருவரங்கப்பெருமாளுக்கு, தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பள்ளியெழுச்சி பாடினார். ஆண்டாளின் திருப்பாவையும் துயிலெழுப்பும் பாடல்தான். மாணிக்க வாசகர், சிவபெருமானுக்கு, திருவெம்பாவை பாடினார்.
பாரதி யாருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். அவரது கோணமே வேறு. பாரத மாதாவிற்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். என்ன அழகான கற்பனை. நீங்களே படியுங்கள்.
பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்;
விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! 1
புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;
வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்;
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!
ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே! 2
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்;
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;
சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே! 3
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி இமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ?
இன்னுயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே! 4
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமக ளே!பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்;
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
இப்போது பாட்டைக் கேட்போம். மொத்தம் ஐந்து சரணங்கள். ஜெயஸ்ரீ பாடினது இரண்டே இரண்டுதான்.
வழக்கம் போல, விருந்தில் பாதியில் எழுந்தது போலத்தான். ஒன்று கவனித்தீர்களா! துயிலெழுப்பும் பாடலும் எவ்வளவு ம்ருதுவாய், சன்னமாய், தூங்குபவர் திடுக்கிட்டு எழுந்து விடாத படி பாடியிருக்கிறார். என்ன இனிமையான குரல், நளினம். சட்டென்று முடிந்துவிட்டதே என்றுதான் தோணுகிறது.
இன்று நவராத்ரியின் ஆறாம் நாள். தினமும் ஒரு பாரதியின் பாடலை, பாம்பே ஜெயஸ்ரீ பாட கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதுவரை கேட்காதவர்கள், பழைய பதிவுகளைப் படிக்கவும்/பாட்டைக் கேட்கவும்.
சில தினங்கள் முன்பு, பாரதியின் தாலாட்டுப்பாடலான, சின்னஞ் சிறு கிளியே பாட்டு கேட்டோம். இன்று அதற்கு நேர்மறையாக ஒரு திருப்பள்ளியெழுச்சி. பொதுவாக, திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் திருப்பள்ளியெழுச்சி கேள்விப்பட்டிருக்கிறோம். திருவரங்கப்பெருமாளுக்கு, தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பள்ளியெழுச்சி பாடினார். ஆண்டாளின் திருப்பாவையும் துயிலெழுப்பும் பாடல்தான். மாணிக்க வாசகர், சிவபெருமானுக்கு, திருவெம்பாவை பாடினார்.
பாரதி யாருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். அவரது கோணமே வேறு. பாரத மாதாவிற்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். என்ன அழகான கற்பனை. நீங்களே படியுங்கள்.
பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்;
விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! 1
புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;
வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்;
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!
ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே! 2
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்;
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;
சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே! 3
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி இமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ?
இன்னுயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே! 4
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமக ளே!பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்;
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
இப்போது பாட்டைக் கேட்போம். மொத்தம் ஐந்து சரணங்கள். ஜெயஸ்ரீ பாடினது இரண்டே இரண்டுதான்.
வழக்கம் போல, விருந்தில் பாதியில் எழுந்தது போலத்தான். ஒன்று கவனித்தீர்களா! துயிலெழுப்பும் பாடலும் எவ்வளவு ம்ருதுவாய், சன்னமாய், தூங்குபவர் திடுக்கிட்டு எழுந்து விடாத படி பாடியிருக்கிறார். என்ன இனிமையான குரல், நளினம். சட்டென்று முடிந்துவிட்டதே என்றுதான் தோணுகிறது.
பாரதி
ஜெயஸ்ரீ
என்ன நண்பர்களே, பாடல் எப்படி? பதிவு எப்படி, இரண்டு வரியில் சொல்லி விட்டுத்தான் போங்களேன்!
அன்புடன் வெங்கட்
10 அக்டோபர் 2013
No comments:
Post a Comment