Monday 14 October 2013

எடுத்த காரியம் யாவினும் வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே (எடுத்த)
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டினேனுக்கு அருளினள் காளி; (விடுத்த)
தடுத்து  நிற்பது  தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து  மாய்ப்பள் அருட்பெருங் காளி,
பாரில் வெற்றி எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணும் ஆருயிரும் என நின்றாள்
காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கி நில் லாவோ?
விண்ணு ளோர் பணிந் தேவல் செய்யாரோ?
வெல்க காளி பதங்களென்பார்க்கே.


ஒன்பது இரவுகள், பத்து பதிவுகள்.

இந்த விஜயதசமி நாள் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும். புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

என்னவொரு பாட்டு, தன்னம்பிக்கையை தட்டியெழுப்பும் பாட்டு. தடுத்து நிற்பது தெய்வதமேனும் அதைக் காளி படுத்து மாய்ப்பளென்று மார் தட்டுகிறார்.

இந்தப்பாடல் ஜெயஸ்ரீ பாடவில்லை (அப்பாடா, அவர் பெயரை ஒரு தடவையாவது எழுதியாயிற்று). பாடியவர் யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். சரியாக கண்டுபிடிப்பவருக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.




அன்புடன் வெங்கட்
14 அக்டோபர் 2013

No comments: