வணக்கம் நண்பர்களே,
அர்ச்சனா என்ற பெண்ணின் மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக இந்த இணையதளம் மூலமாக நன்கொடை திரட்டி உதவி செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 2013 ம் வருஷம். பலமுறை கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அப்போது மரணத்தின் சமீபம் வரை போய் திரும்பினார். அப்போது அர்ச்சனாவின் குழந்தையின் வயது நான்கு மாதம்.
அதற்கு பிறகு புத்தாண்டு, தீபாவளி போன்ற நாட்களில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் செய்தி வரும். நானும் பதில் அனுப்புவது உண்டு. கடந்த ஜூலை 7ம் தேதி வழக்கமான நலம் விசாரிப்பு செய்தி வந்தது.
இப்போதுதான் இடியாய் செய்தி வந்தது. நேற்று அர்ச்சனா காலமாகி விட்டதாக. அவரது தந்தையை கூப்பிட்டு பேசினேன். நன்றாகத்தான் இருந்தாள், திடீரென்று மூச்சு விட முடியவில்லை என்றாள், அருகே சங்காரெட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துப்போனோம். சிகிச்சை பலனில்லாமல் அர்ச்சனா நம்மை விட்டுப் போய்விட்டாள் என்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னால் திரும்பவும் ரேடியேஷன் சிகிச்சை கொடுத்தார்களாம், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில். மற்ற படி நன்றாகத்தான் இருந்தாள் என்று சொல்கிறார்.
மிகவும் வருத்தமாக உள்ளது. இளம்தாய். நான்கு வயது பாலகன். வாழ்க்கைக்குப் போராடித் தோற்றுவிட்டாள். கடைசியில் எந்த வியாதியின் கொடூரமென்று தெரியவில்லை.மனம் கனக்கிறது.
அர்ச்சனாவின் மருத்துவ செலவுகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி. காலனை, மூன்று வருஷம் தூரத்தில் வைத்திருந்தோம். கடைசியில் அவனே வென்று விட்டான். அர்ச்சனாவின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தியுங்கள்.
அன்புடன் வெங்கட்
அர்ச்சனா என்ற பெண்ணின் மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக இந்த இணையதளம் மூலமாக நன்கொடை திரட்டி உதவி செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 2013 ம் வருஷம். பலமுறை கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அப்போது மரணத்தின் சமீபம் வரை போய் திரும்பினார். அப்போது அர்ச்சனாவின் குழந்தையின் வயது நான்கு மாதம்.
அதற்கு பிறகு புத்தாண்டு, தீபாவளி போன்ற நாட்களில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் செய்தி வரும். நானும் பதில் அனுப்புவது உண்டு. கடந்த ஜூலை 7ம் தேதி வழக்கமான நலம் விசாரிப்பு செய்தி வந்தது.
இப்போதுதான் இடியாய் செய்தி வந்தது. நேற்று அர்ச்சனா காலமாகி விட்டதாக. அவரது தந்தையை கூப்பிட்டு பேசினேன். நன்றாகத்தான் இருந்தாள், திடீரென்று மூச்சு விட முடியவில்லை என்றாள், அருகே சங்காரெட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துப்போனோம். சிகிச்சை பலனில்லாமல் அர்ச்சனா நம்மை விட்டுப் போய்விட்டாள் என்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னால் திரும்பவும் ரேடியேஷன் சிகிச்சை கொடுத்தார்களாம், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில். மற்ற படி நன்றாகத்தான் இருந்தாள் என்று சொல்கிறார்.
மிகவும் வருத்தமாக உள்ளது. இளம்தாய். நான்கு வயது பாலகன். வாழ்க்கைக்குப் போராடித் தோற்றுவிட்டாள். கடைசியில் எந்த வியாதியின் கொடூரமென்று தெரியவில்லை.மனம் கனக்கிறது.
அர்ச்சனாவின் மருத்துவ செலவுகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி. காலனை, மூன்று வருஷம் தூரத்தில் வைத்திருந்தோம். கடைசியில் அவனே வென்று விட்டான். அர்ச்சனாவின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தியுங்கள்.
அன்புடன் வெங்கட்
வணக்கம் நண்பர்களே,
அண்மைக்காலமாக, அர்ச்சனாவின் உடல் நிலை பற்றி இங்கே எழுதவில்லையே தவிர, அவரது தந்தையாரிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தேன். நேற்று, மூன்றாவது கீமோதெரபி முடிந்து, வீடு திரும்பியிருக்கிறார்கள். அடுத்த சிகிச்சை நவம்பர் நாலாம் தேதி. மெடிகல் ரிப்போர்ட் மற்றும் செலவுக்கான விபரங்கள் அனுப்பியுள்ளார்கள். அவை உங்கள் பார்வைக்கு.
Archana's prescription (16 Oct 2013)
Medical report page 2
Medical report 16 Oct 2013
Expense vouchers( Clinic bill)
Misc expenses like transport, food etc
Pharmacy bill
என்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, தாராளமாக நிதியுதவி அளித்தமைக்கு மிகவும் நன்றி. அர்ச்சனாவின் குடும்பத்தினர், தங்களது நன்றியை தெரிவிக்கச் சொன்னார்கள். இப்போதைக்கு ஆறு கீமோதெரபிக்கான தொகை சேர்ந்துவிட்டது. அதற்குப்பிறகு என்ன சிகிச்சை என்று இன்னமும் தெரியவில்லை. நீங்கள் எல்லோரும், அர்ச்சனா உடல் நலம் பெற வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனைப் ப்ராத்தியுங்கள். இருபத்தாறு வயதில், மூணு மாதக் குழந்தையுள்ள இளம் தாய்க்கு புற்று நோய் என்பது மிகக் கொடூரமானது.
மேற்படி தகவல்கள் கிடைத்தால், இங்கே பதிவிடுகிறேன்.
அன்புடன்
வெங்கட்
17 அக்டோபர் 2013