பரதக்கலை என்பது ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், டாக்டர். ஜாகீர் உசேன். நாட்டியம் மற்றுமின்றி, ஸ்ரீவைணவத்திலே மிகுந்த ஈடுபாடு கொண்டு, ஆண்டாளின் நாச்சியார் திருமொழியிலே லயித்து, அதைப்பற்றி எளிய தமிழில் சொற்பொழிவாற்றுகிறார். தனது, நாட்டியங்களிலே, அபிநயித்து, அந்த மையலை நம் கண் முன்னால் கொண்டு வருகிறார்.
பிரபல நாட்டியக்கலைஞரான திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரனிடம் நடனம் பயின்ற இவர், வைணவ ஆகமங்களிலும் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். இந்திய அரசு, ஸ்ரீவைணவ ஆகமங்களில், ஆராய்ச்சி செய்ய ’ஸீனியர் பெஃல்லோஷிப்’ வழங்கியிருக்கிறது.
மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை நன்கு கற்றுணர்ந்த இவர், பாஞ்சாலி சபதம் மற்றும் சீதாயணம் என்ற நாட்டிய நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறார். இவரைப் பற்றிய தகவல்களை அறிய, இந்த தளத்தைப் பார்க்கவும்.
அவரது இரண்டு நடனங்கள் உங்கள் பார்வைக்கு. இரண்டாவது காணொளி, ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ‘அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்’.
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!
இவரது ஆண்டாள் சொற்பொழிவு நாளை பதிவேற்றப்படும்.
அன்புடன் வெங்கட்
1 comment:
ஜாகிர் ஹுசேனுக்குக் கிடைத்த கௌரவம் : 20.6.2014 The Hindu-வில் வந்த கட்டுரை காண்க :-
http://www.thehindu.com/features/friday-review/dance/unique-seeker/article6129976.ece
-ஜி.ஸன்தானம்
Post a Comment