Thursday 29 August 2013

இன்று கண்ணன் பிறந்த நாள்



இன்று கண்ணன் பிறந்த நாள். பெரியாழ்வார் போல் கண்ணனை அனுபவித்தவர் ஒருவரும் இல்லை. பல்லாண்டு பாடின கையோடு கண்ணன் பிறப்புதான். கம்ஸனுக்கு தெரிந்து விடும் என்று பிறந்த நட்சத்திரததை மறைத்து அத்தத்தின் பத்தா நாள் என்றார். அத்தம் என்பது ஹஸ்தம். ஒருபுறமாக எண்ணினால் திருவோணம் வரும். இன்னொரு புறமாக எண்ணினால் ரோகிணி வரும். பயத்தில் ஊரைக்கூட மாற்றி திருக்கோஷ்டியூரில் பிறந்ததாக சொல்கிறார்.

கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாருங்கள் கண்ணன் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்.

மேலே நீங்கள் காணும் கண்ணன் எந்த கோவிலின் திருவுருவம் என்று தெரியுமா? ரொம்பவும் பிரபலமான கோவிலில்லை. சென்னை, மேடவாக்கம் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலின் ஒரு சன்னிதி. அற்புதமான திருவுருவம். திருமஞ்சன வீடியோ கூட இருக்கிறது. தேடிப்ப்பார்த்து பின்னர் பதிவிடுகிறேன்.

அன்புடன் வெங்கட்


No comments: