Monday 23 September 2013

அர்ச்சனாவின் கேன்சர் சிகிச்சை; தற்போதய செய்தி

 நண்பர்களே,

முதலில், என்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, நிதியுதவி அளித்தமைக்கு கோடானுகோடி நன்றி.

இப்போதுதான், அர்ச்சனாவின் அப்பாவிடம் பேசினேன். இரண்டாவது கீமோதெரபி சிகிச்சை இன்று முடிவடைந்தது. இரவு சங்காரெட்டிக்கு திரும்பிச்செல்கிறார்கள்.

அடுத்த முறை சிகிச்சைக்கு 13ம் தேதி அக்டோபர் திரும்பவும் அட்மிட் ஆக வேண்டும். ஒருதடவைக்கு ரூபாய் 80,000 செலவாகிறது. இந்த முறைக்கான செலவை நன்கொடை மூலம் சமாளித்து விட்டார்கள். மொத்த செலவும் நாம் அனுப்பின தொகையிலிருந்து செலவழித்தாக கூறினார்.

மருத்துவமனையின் ஆவணங்களை ஒன்றிரண்டு நாளில் ஸ்கான் செய்து அனுப்புவதாகச் சொல்லியுள்ளார். வந்ததும் இந்த வலைத்தளத்தில் பதிவிடுகிறேன்.

பாரதி சொன்னதுபோல், “ நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்”. ஒரு ஏழைப்பெண்ணின், இளம் தாயின் உயிர் காத்த புண்ணியம் உங்களுக்குச் சேரும்.

அன்புடன் வெங்கட்

No comments: