Tuesday 17 September 2013

அர்ச்சனாவின் மருத்துவ உதவி தற்சமய நிலவரம்

 நண்பர்களே,

இரு தினங்களுக்கு முன், அர்ச்சனா என்கிற இளம் தாய்க்கு, மார்பக புற்று நோய்க்காக, நிதியுதவி கேட்டிருந்தேன். அது பற்றி சில பின்னோட்டங்கள் வந்தன. நேற்றும் ஒரு பதிவிட்டு, மேலும் சில தகவல்கள் கொடுத்திருந்தேன். அந்த பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கலாம்.

அர்ச்சனாவின் அப்பா இப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 20ம் தேதி செப்டம்பர், கீமோதெரபிக்காக அட்மிட் ஆக வேண்டும். ஒரு தடவைக்கான மருத்துவச்செலவு 85,000 ரூபாய்.

 நானும், என் நண்பர்களுமாக கணிசமான தொகை அனுப்பினோம். இன்னும் ஒன்றிரண்டு அன்பர்கள் அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கிட்டத்தட்ட 50,000 வரை சேர்ந்துள்ளது. மருத்துவ செலவு தவிரவும் மற்ற செலவுகள் இருக்கும். 20 ம் தேதிக்கு அதிக நாளில்லை. தவிர, மொத்தம் ஆறு தடவை கீமோதெரபி போக வேண்டும். ஒரு தடவை சிகிச்சை முடிந்திருக்கிறது. 20ம் தேதி, இரண்டாவது முறை. இன்னும் நான்கு முறை போயாக வேண்டும். எனவே, உங்கள் உதவி அவசியம் தேவை.

இருபத்தாறு வயதான இளம்தாய். ஒரு மாதக்குழந்தை. பாலூட்ட வேண்டிய வேளையில், மார்பகப் புற்று நோயால் அவதிப்படுகிறார்.

தயவுசெய்து உதவுங்கள்.

அன்புடன் வெங்கட்

2 comments:

Anonymous said...

Hi Venkat,

Is there a number to reach you? I want to talk to you.

- KV

Venkat said...

971505848561