Thursday, 10 October 2013

ஏழாம் நாள் பதிவு; நவராத்ரி தொடர். ஜெயஸ்ரீ பாடிய பாரதி பாடல்கள்

வணக்கம் நண்பர்களே,

இதோ ஏழாவது நாள் பதிவு. தினமும் விடாமல் பாட்டைத் தேடிப்பிடித்து, கவிதை வரிகளைத் தேடி, பதிவெழுதுவது ஒரு த்ரில்தான்.

இன்றைக்கு இன்னொரு கண்ணம்மா பாட்டு.


நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன் ( நின்னை..)

பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று ( நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

தன்செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்

அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
நல்லவை நாட்டுக தீமையை ஓட்டிக( நின்னை)



பாரதியின் கையெழுத்து


ஜெயஸ்ரீ


இந்தப் பாட்டும் கேட்க மிக இனிமை. ரசியுங்கள்.

நாளை சந்திப்போம்.

அன்புடன் வெங்கட்
11 அக்டோபர் 2013








No comments: